உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சுரங்க பாலத்தில் சிரமம்; சீரமைக்க எதிர்பார்ப்பு

சுரங்க பாலத்தில் சிரமம்; சீரமைக்க எதிர்பார்ப்பு

உடுமலை; ராகல்பாவி கிராம இணைப்பு ரோட்டிலுள்ள, சுரங்கப்பாலத்தில், மழைக்காலங்களில் போக்குவரத்து பாதிப்பை தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். உடுமலை பகுதியில் அகல ரயில்பாதை செல்லும் வழியில், மக்கள் எளிதில் செல்லும் வகையில், சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. இப்பாதைகளில் ரோடு சேதமடைந்து காணப்படுகிறது. மழைக்காலங்களில் தண்ணீரும் தேங்கி விடுகிறது. இது அப்பகுதியில் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டுநர்களுக்கு மிகுந்து சிரமத்தை அளித்து வருகிறது. இதை சரிசெய்ய மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவ்வகையில், உடுமலை நகரில் இருந்து, தங்கம்மாள் ஓடை குடியிருப்பு வழியாக, ராகல்பாவி கிராமத்துக்கு செல்லும் இணைப்பு ரோடு உள்ளது. இந்த ரோட்டில், எம்.பி., நகர் குடியிருப்பு தாண்டியதும், அகல ரயில்பாதை குறுக்கிடுகிறது. அவ்விடத்தில், ரயில்வே சுரங்கப்பாதை சில ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. ஆனால், மழைக்காலத்தில், பாலத்தில் தேங்கும் தண்ணீரை வெளியேற்ற எவ்வித வசதிகளும் செய்யப்படவில்லை. இதனால், ஒவ்வொரு மழைக்காலத்திலும், அவ்வழியாக செல்ல முடியாமல் போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. நீண்ட நாட்கள் அப்பகுதியில், தண்ணீர் தேங்கி நிற்பதால், சுரங்க பாலத்தின் ஓடுதளம் முற்றிலுமாக சிதைந்து, குண்டும், குழியுமாக மாறி விட்டது. இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் திணறியபடி, சுரங்கப்பாலத்தை கடக்க வேண்டியுள்ளது. எனவே, மழை நீர் தேங்குவதை தடுக்கவும், ஓடுதளத்தை சீரமைக்கவும், உள்ளாட்சி அமைப்பினர், ரயில்வே நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை