உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கண் பரிசோதனை முகாம்

கண் பரிசோதனை முகாம்

உடுமலை; குடிமங்கலம் ஸ்ரீராம் மகாலில், நாளை (21ம்) தேதி இலவச கண் பரிசோதனை முகாம் நடக்கிறது. திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், உடுமலை லயன்ஸ் சங்கம், லயன்ஸ் சங்க அறக்கட்டளை, அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் கோட்டமங்கலம் முன்னாள் ஊராட்சி தலைவர் வேலாயுதசாமி சார்பில், இலவச கண் பரிசோதனை மற்றும் 'ஆர்த்தோ' முகாம் நடக்கிறது. அனைத்து வகையான கண் சிகிச்சைகளும் இம்முகாமில் வழங்கப்படுகிறது. காலை 8:00 மணி முதல் பகல் 1:00 மணி வரை நடக்கும் இம்முகாமை, அப்பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என ஒருங்கிணைப்பாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை