செலவுக்கு பணம் தர மறுத்த தந்தை கொலை: மகன் கைது
திருப்பூர்; செலவுக்கு பணம் கேட்டு தாய், தந்தையை மகன் தாக்கினார். இதில் சிகிச்சையில் இருந்த தந்தை உயிரிழந்தார். கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் மகனைக் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம், ஊத்துக் குளி - சாம்ராஜ்பாளையத்தைச் சேர்ந்தவர் கிட்டான், 67. அவரின் மகன் முத்துக்குமார். மாற்றுத்திறனாளியான கிட்டான் வேலைக்குச் செல்வதில்லை. மனைவி சின்னாள் நுாறு வேலை திட்டத்துக்கும், மகன் முத்துக்குமார் கூலி வேலைக்கும் செல்கின்றனர்.கடந்த, 2ம் தேதி, முத்துக்குமார் செலவுக்கு பணம் கேட்டு பெற்றோரை மிரட்டியுள்ளார். பணம் தர மறுத்த நிலையில், இருவரையும் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.இதில், பலத்த காயமடைந்த கிட்டான் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை அவர் உயிரிழந்தார். ஊத்துக்குளி போலீசார் தாக்குதல் வழக்கை கொலை வழக்காக மாற்றி, முத்துக்குமாரை கைது செய்தனர்.