உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு பெண்கள் பள்ளி சதம்; பிளஸ் 2 தேர்வில் சாதனை

அரசு பெண்கள் பள்ளி சதம்; பிளஸ் 2 தேர்வில் சாதனை

உடுமலை; பிளஸ் 2 பொதுத்தேர்வில், உடுமலை சுற்றுப்பகுதியில் பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நுாறு சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.உடுமலையில், 18 மையங்களில், 3,911 மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதினர். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியிடப்பட்டன. உடுமலையில் பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நுாறு சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.மற்ற பள்ளிகளில் மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி 99 சதவீதம், பெரியவாளவாடி, எலையமுத்துார், பூளவாடி அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி மேல்நிலைப்பள்ளி 98 சதவீதம் பெற்றுள்ளன.உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளி, பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி 97 சதவீதமும், கணியூர் வெங்கடகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி, காரத்தொழுவு மற்றும் ஜல்லிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளிகள் 96 சதவீதமும் பெற்றுள்ளன.உடுமலை விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளி, தேவனுார்புதுார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள் 95 சதவீதமும், குடிமங்கலம், உடுக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் புங்கமுத்துார் காந்திகலா நிலைய மேல்நிலைப்பள்ளி 94 சதவீதமும் பெற்றுள்ளன.குமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளி 91, உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 90, ராமச்சந்திராபுரம் மற்றும் உடுமலை ராஜேந்திரா ரோடு அரசு மேல்நிலைப்பள்ளிகள் 87 சதவீதமும் பெற்றுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை