உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  கொப்பரை உற்பத்தி பாதிப்பு: மழைக்கு பிறகு மாற்றம்

 கொப்பரை உற்பத்தி பாதிப்பு: மழைக்கு பிறகு மாற்றம்

உடுமலை: உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. வடகிழக்கு பருவமழை பரவலாக தொடர்வதால், உலர் களங்களில், கொப்பரை உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பகலிலும், வெயிலின் தாக்கம் இல்லாமல், குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுவதால், கொப்பரை உற்பத்தியிலும், வர்த்தகத்திலும் மந்தநிலை தொடர்கிறது. நோய்தாக்குதலால், தேங்காய் உற்பத்தி பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால், தேவை அதிகரித்து, கடந்த சில மாதங்களாக, கொப்பரைக்கு நல்ல விலை கிடைத்தது. இதை அடிப்படையாக கொண்டு தேங்காய் விலையும் உயர்ந்தது.தற்போது கொப்பரை வர்த்தகத்தில், நிலை இல்லாமல், நாள்தோறும் விலையில் ஏற்ற, இறக்கம் உள்ளது. பருவமழை இடைவெளி விட்டதும், கொப்பரை உற்பத்தி சீராகும்; விலை அதிகரிக்கும். தேங்காய்க்கும் நிலையான விலை கிடைக்கும்என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை