அசல் மதிப்பெண் சான்றிதழ் மாணவர்களுக்கு வழங்கல்
உடுமலை: உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. உடுமலை எஸ்.கே.பி மேல்நிலைப்பள்ளியில், கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் சுப்ரமணியம் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் முக்கியத்துவம் குறித்து பேசினார். மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. கணித ஆசிரியர் நடராஜன் நன்றி தெரிவித்தார்.