ரூ.12 லட்சத்துக்கு காங்கேயம் இன மாடுகள் விற்பனை
காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம், நத்தக்காடையூர் அருகே, பழை-யகோட்டை மாட்டுத்தாவணியில் காங்கேயம் இன மாடுகளுக்-கான சந்தை நேற்று நடந்தது. மாடுகள், காளைகள், கிடாரி மற்றும் காளை கன்றுகள் என, 66 கால்நடைகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். மாடுகள், 20 ஆயிரம் ரூபாய் முதல், 75 ஆயிரம் ரூபாய் வரை விற்றன. கிடாரி கன்று, 12 ஆயிரம் ரூபாய் முதல், 40 ஆயிரம் வரை விற்றது. மொத்தம், 38 கால்நடைகள், 12 லட்சம் ரூபாய்க்கு விற்றன.