கருணாநிதி நுாற்றாண்டு தமிழ் மன்ற விழா
அவிநாசி,; தமிழ் வளர்ச்சித் துறையும், அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தமிழ்த்துறையும் இணைந்து கருணாநிதி நுாற்றாண்டு தமிழ் மன்ற விழாவை நடத்தின.கடந்த 17ம் தேதி பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடந்தன. இதில் முதலிடம் வென்றோருக்கு 5 ஆயிரம் ரூபாய்; இரண்டாமிடம் பெற்றோருக்கு 3 ஆயிரம் ரூபாய்; மூன்றாமிடம் பெற்றோருக்கு 2 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவுக்கு கல்லுாரி முதல்வர் முனைவர் நளதம் தலைமை தாங்கினார். தமிழ்த்துறை தலைவர் மணிவண்ணன் வரவேற்றார்.