கரட்டுப்பாளையத்தில் காயா மரக்கன்றுகள்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், 'வனத்துக்குள் திருப்பூர் - 11' திட்டத்தில் மரக்கன்றுகள் நடும் பணி வேகமெடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால், விவசாய நிலங்களில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். வெள்ளகோவில் அடுத்த கரட்டுப்பாளையம் பெரியதோட்டத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. உரிமையாளர்கள், சிவக்குமார், சரோஜினி, ரித்விக் பிரணவ் உள்ளிட்டோர் மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தனர். மொத்தம், 2,300 காயா மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதில், இலவசமாக மரக்கன்றுகள் நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் அணுகலாம் என, வனத்துக்குள் திருப்பூர் திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.