இசை நிகழ்ச்சி பொள்ளாச்சி
உடுமலை : உடுமலையில், வரும் 26ம் தேதி திருமுறை திருவாசக இசை நிகழ்ச்சி நடக்கிறது.உடுமலை கார்த்திகை விழா மன்றம் சார்பில், வைகாசி மாத கிருத்திகை விழா, வரும் 26ம் தேதி மாலை, 7:00 மணிக்கு பிரசன்ன விநாயகர் கோவிலில் நடக்கிறது. இதில் திருமுறை திருவாசக இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.இதனை ஓதுவாமூர்த்திகள் மருதமலை ஆனந்த சிவம், சோமந்துரைசித்துார் ஜெயப்பிரகாஷ் நாராயணன் நிகழ்த்துகின்றனர். இதில் உடுமலை மற்றும் சுற்றியுள்ள பக்தர்கள், ஆன்மிக ஆர்வலர்கள் பங்கேற்கின்றனர்.