உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரேஷன் கடைகளுக்கு புதியவகை எலக்ட்ரானிக் தராசு!

ரேஷன் கடைகளுக்கு புதியவகை எலக்ட்ரானிக் தராசு!

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்திலுள்ள ரேஷன் கடைகளுக்கு, புதியவகை தராசுகள் வழங்கப்பட்டுவருகின்றன.திருப்பூர் மாவட்டத்தில், 1,135 ரேஷன் கடைகள் உள்ளன. ஒன்பது லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். கடந்த பிப்., மாதம், மாவட்டத்தில் இரண்டு ரேஷன் கடைகளில் புதிய தராசு பொருத்தப்பட்டு, சோதனை ஓட்டம் பார்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போது, படிப்படியாக ரேஷன் கடைகளுக்கு தராசு வழங்கப்பட்டு வருகிறது.புதியவகை தராசு, ப்ளூடூத், யு.எஸ்.பி., கேபிள் ஆகியவற்றில் ஏதேனும் ஒருவகையில் பாய்ன்ட் ஆப் சேல் கருவியுடன் இணைக்கப்படுகிறது. தராசில் வைக்கப்படும் உணவுப் பொருளின் எடையே, கார்டுதாரருக்கு வழங்கப்பட்டதாக பாய்ன்ட் ஆப் சேல் கருவியில் பதிவாகிறது.விற்பனையாளர் சுயமாக பொருளின் எடையை உள்ளீடு செய்யமுடியாது. இதனால், ரேஷன் பொருட்கள் எடை குறைவாக வினியோகிப்பது தடுக்கப்படும்.ஒவ்வொரு முறையும் தராசில் பொருள் வைத்தபின்னரே, பாய்ன்ட் ஆப் சேல் மெஷினில் பதிவு செய்யமுடியும் என்பதால், உதவியாளர் இல்லாத கடைகளில், பொருட்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்படும். விற்பனையாளர் இல்லாதநிலையில், ஒேர விற்பனையாளர் இரண்டு ரேஷன் கடைகளை கவனிக்கின்றனர். இதுபோன்ற கடைகளிலும் விற்பனை பாதிக்கும்.

பணிச்சுமை அதிகரிக்கும்!

தமிழ்நாடு கூட்டுறவு சம்மேளன மாநில பொதுச்செயலாளர் கவுதமன் கூறியதாவது:ரேஷன் கடைகளுக்கு வழங்கப்பட்டுவரும் புதிய வகை தராசில், உணவுப்பொருளை 50 கிராம் கூட குறைவாக எடைபோட முடியாது. எனவே, ரேஷன் கடைகளுக்கு, கூட்டுறவுத்துறை, ரேஷன் கடைகளுக்கு சரியான எடையில் பொருட்கள் வழங்கவேண்டும். உதவியாளர் இல்லாத கடைகளில், விற்பனையாளரே பில் போட்டு, பொருட்களை எடைபோட்டு வழங்கவேண்டியுள்ளது. ஒரே விற்பனையாளர் இரண்டு கடைகளில் பணிபுரியவேண்டியுள்ளதால் பணிச்சுமை ஏற்படுகிறது.புதியவகை தராசு வழங்கப்படும்போது, பணிச்சுமை மேலும் அதிகரிக்கும். விற்பனையாளர்கள், ஒவ்வொரு முறையும், தராசில் பொருளை வைத்துவிட்டு, பாய்ன்ட் ஆப் சேல் கருவியில் பதிவு செய்ய வேண்டி வரும்.ரேஷன் காலிப்பணியிடங்களுக்கான நேர்காணல் நடத்தி மூன்று மாதங்களாகிறது. ஆனால் இன்னும், பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. எனவே, உடனடியாக மாவட்டம் முழுவதும் ரேஷன்கடைகளில், காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sivagiri
ஏப் 01, 2025 08:42

பெரும்பாலான கடைகளில், மீட்டரை மட்டும்தான் மக்கள் பார்வை படும் படி வைப்பார்கள் - எடை போடும் தராசை கொஞ்சம் மறைவாகத்தான் வைப்பார்கள் - தராசின் சைடில் ஒரு கல் இருக்கும் , எடை போடும் போது , சைடில் நைசாக அந்தக் கல்லையும் வைத்து எடுத்து விடுவார்கள் - ஒரு கிலோவுக்கு கால் கிலோ , ரெண்டு கிலோவுக்கு அரை கிலோ குறையும் . .. எனவே எடை போடும் தராசையும் மக்கள் பார்வையில் படும் படி முன்புறம் வைக்க உத்தரவிட வேண்டும் . . .


rama adhavan
ஏப் 01, 2025 07:25

மளிகை கடைகளில் உள்ளது போல் 10 கிலோ, 5 கிலோஅரிசிக்கு, 2 கிலோ கோதுமைக்கு ஒரு கிலோ, அரை கிலோ பாக்கெட்களில் பொருட்களை ரேஷனில் தரலாமே? எடை போடுபவர் தேவை இல்லை. ஊழலும் இல்லை. ஆனால் செய்ய மாட்டார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை