உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பஞ்சலிங்கம் அருவிக்கு 3 நாட்களுக்கு பின் அனுமதி

பஞ்சலிங்கம் அருவிக்கு 3 நாட்களுக்கு பின் அனுமதி

உடுமலை; உடுமலை திருமூர்த்திமலை பஞ்சலிங்கம் அருவிக்கு, 3 நாட்களுக்கு பின், பக்தர்கள், சுற்றுலா பயணியர் நேற்று அனுமதிக்கப்பட்டனர். உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில், மலைமேல் பஞ்சலிங்கம் அருவி மற்றும் மலையடிவாரத்தில் தோணியாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே அமைந்துள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில், அணை, நீச்சல் குளம் என சுற்றுலா மற்றும் ஆன்மிக மையமாக உள்ளது. இங்கு, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து, தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர், பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருமூர்த்திமலைப்பகுதிகளில், கன மழை பெய்து, அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கடந்த, 26ம் தேதி முதல், பஞ்சலிங்கம் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. நேற்று மழை குறைந்து, அருவியில் சீரான அளவு நீர் வரத்து காணப்பட்டது. இதனையடுத்து, 3 நாட்களுக்கு பின் பஞ்சலிங்கம் அருவியில் குளிக்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஏராளமான மக்கள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். அதே போல், கோவிலில் வழக்கமாக பூஜைகள் நடந்த நிலையில், பக்தர்கள் மும்மூர்த்திகளை வழிபட்டனர். அமணலிங்கேஸ்வர் கோவில் பணியாளர்கள் கண்காணிப்பு பணயில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை