மேலும் செய்திகள்
பிளஸ் 2 செய்முறைத்தேர்வு நாளை துவக்கம்
06-Feb-2025
திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில் மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு நேற்று துவங்கியது.காலை 8:30 மணிக்கு தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு வந்தனர். பள்ளி மாணவர், மாணவியர் எண்ணிக்கைக்கு ஏற்ப இரண்டு அல்லது மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர். குறைந்த மாணவ, மாணவியர் உள்ள பள்ளிகளில் ஒரு பிரிவாக தேர்வுகள் நடத்தப்பட்டது. நேற்று ஆய்வகங்களில் வேதியியல், இயற்பியல், கணிணி கூடங்களில் கம்ப்யூட்டர் அறிவியல் ஆகிய பாடங்களுக்கான செய்முறைத் தேர்வு நடந்தது.
06-Feb-2025