உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  தெரு நாய்கள் தொல்லை அச்சத்தில் பொதுமக்கள்

 தெரு நாய்கள் தொல்லை அச்சத்தில் பொதுமக்கள்

உடுமலை: உடுமலை பகுதியில், பிரதான ரோடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தெருநாய்கள் அதிகளவு சுற்றி வருவதோடு, பொதுமக்களை கடிப்பதால் அச்சமடைந்துள்ளனர். உடுமலை, சந்தை ரோடு, கல்பனா ரோடு, தாராபுரம் ரோடு, யு.எஸ்.எஸ்.,காலனி ரோடு, திருப்பூர் மற்றும் தளி ரோடு, ரயில்வே மேம்பாலம் உள்ளிட்ட பிரதான ரோடுகளில் தெரு நாய்கள் அதிகளவு சுற்றி வருகின்றன. அதே போல், 33 வார்டுகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும், தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றி வருகின்றன. இவை, ரோட்டில் நடந்து செல்லும் குழந்தைகள், பொதுமக்களை விரட்டிச்சென்று கடிக்கின்றன. பிரதான ரோடுகளில், இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை தெருநாய்கள் துரத்துவதால், விபத்துக்கள் ஏற்பட்டு மக்கள் பாதிக்கின்றனர். எனவே, தெருநாய்களை கட்டுப்படுத்த நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி