ரோட்டில் பள்ளம்; விபத்து அபாயம்
பொங்கலுார்; கொடுவாய் சந்தை கடை ரோட்டில் இருந்து மாகாளியம்மன் கோவில் வீதிக்குச் செல்லும் இணைப்பு ரோடு உள்ளது. இதில் நடுரோட்டில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே, இதை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.