உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / பெண் சகவாசத்தை கேட்டதால் தாக்குதல் இயக்குனர் மீது மனைவி புகார்

பெண் சகவாசத்தை கேட்டதால் தாக்குதல் இயக்குனர் மீது மனைவி புகார்

திருவண்ணாமலை,:பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளதை தட்டி கேட்டதால், திரைப்பட இயக்குனரும், கணவருமான லஷ்மிகாந்தன், தன்னை தாக்கினார் என, அவர் மனைவி, திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகார் படி, போலீசார் விசாரிக்கின்றனர். திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்காலை சேர்ந்தவர் பூர்ணிமா, 41; திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த செட்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த, பாணா காத்தாடி திரைப்பட இயக்குனர் லஷ்மிகாந்தன்; இவரும் திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இவர், பூர்ணிமாவை கடந்த, 2016, பிப்., 16 ல் கலசப்பாக்கம் அடுத்த பூண்டி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். பின் கடந்த, 2021 வரை, 5 வருடங்களாக சென்னை, அசோக் நகரில் இருவரும் வசித்தனர். அப்போது லஷ்மிகாந்தனுக்கு பல பெண்களிடம் பழக்கம் ஏற்பட்டதாக தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதை தட்டி கேட்ட பூர்ணிமாவை லஷ்மி காந்தன் தாக்கினார். இதனால் பூர்ணிமா, உயிருக்கு பயந்து, திருவண்ணாமலையிலுள்ள தன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.அவரை, லஷ்மிகாந்தன் அவ்வப்போது சென்று பார்த்து வருவது வழக்கம். அவருக்கு, மற்றொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறி, தட்டிக்கேட்ட பூர்ணிமாவை, லஷ்மி காந்தன் மீண்டும் தாக்கியுள்ளார். இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க, திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் நேற்று பூர்ணிமா புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து, ஜூலை, 7 ம் தேதி விசாரணைக்கு ஆஜராக, இருவருக்கும் சம்மன் அளித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி