மலை மீது ஏறிய பக்தர் பலி
திருவண்ணாமலை:கேரள மாநிலம், எர்ணாகுளம், கச்சேரிபடியை சேர்ந்தவர் தனியார் நிறுவன ஊழியர் கிருஷ்ணந்து, 45. இவர் அக்.5ல் திருவண்ணாமலைக்கு சுவாமி தரிசனத்திற்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் மாலை, மலை மீதுள்ள கந்தாஸ்ரமத்தை தரிசனம் செய்ய, மலை மீது ஏறினார். வழியில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். திருவண்ணாமலை டவுன் போலீசார் அவரை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.