உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / பஸ்சில் பெண்ணிடம் ரூ.3 லட்சம் திருட்டு

பஸ்சில் பெண்ணிடம் ரூ.3 லட்சம் திருட்டு

திருவண்ணாமலை:திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த அரட்டவாடி கிராமத்தைச் சேர்ந்த பிரபு, வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுமித்ரா, 33, திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையத்தில் வீடு கட்டி வருகிறார்.இவர், வீடு கட்ட சீட்டு கட்டி சேமித்து வைத்திருந்த, 3 லட்சம் ரூபாயுடன், திருவண்ணாமலையில் இருந்து அரட்டவாடிக்கு அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.தேனிமலை அருகே பஸ் சென்றபோது, சுமித்ரா பையை பார்த்தபோது, 3 லட்சம் ரூபாயை காணவில்லை. பஸ்சில் வந்தவர்களில் யாராவது பணத்தை திருடியிருக்கலாம் என, சுமித்ரா அளித்த புகார்படி, திருவண்ணாமலை டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை