உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / ஏ.டி.எம்.,மை உடைக்க முயற்சி

ஏ.டி.எம்.,மை உடைக்க முயற்சி

திருச்சி:திருச்சி மாவட்டம், மணிகண்டம் யூனியன் அலுவலகம் அருகே, மதுரை பைபாஸ் சாலையில், சென்ட்ரல் வங்கி அலுவலகத்துடன் இணைந்த ஏ.டி.எம்., உள்ளது. பைபாஸ் சாலையில் உள்ளதால், இந்த ஏ.டி.எம்.,க்கு காவலாளி கிடையாது.நேற்று அதிகாலை, 4 மணியளவில், இந்த ஏ.டி.எம்.,க்கு வந்த, இரு திருடர்கள், உள்ளே சென்று சிறிய கடப்பாரை மூலம், ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைக்க முயன்றனர். அப்போது அலாரம் ஒலித்ததால், கடப்பாரையை அங்கேயே போட்டு விட்டு, திருடர்கள் தப்பியோடி விட்டனர்.மணிகண்டம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ