கார் மீது கார் மோதிய விபத்தில் தம்பதி பலி; மகன், மகள் படுகாயம்
சந்தவாசல்: வேலுார் அருகே, கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், தம்பதி பலியாகினர். மகன், மகள் படுகாயமடைந்தனர். வேலுார் மாவட்டம் கணியம்பாடியை அடுத்த நெல்வாய் கிரா-மத்தை சேர்ந்த கார் மெக்கானிக் ஸ்ரீதர், 44; இவரது மனைவி சங்-கீதா, 40. இவர்களது மகன் அஜய், 16; மகள் அனுஷ்கா, 14; திருவண்ணாமலைக்கு நான்கு பேரும் நேற்று காலை, 8:00 மணி-யளவில் ஹூண்டாய் காரில் சென்றனர். காரை ஸ்ரீதர் ஓட்டினார்.திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த அய்யம்-பாளையம் அருகே சென்றபோது, எதிரே வந்த இன்னோவா கார், நேருக்கு நேர் மோதியது. இதில் ஸ்ரீதர் சம்பவ இடத்தில் பலி-யானார். மற்ற மூவரும் பலத்த காயமடைந்து, வேலுார் அடுக்கம்-பாறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்-டனர். அங்கு சங்கீதா பலியானார். அஜய், அனுஷ்கா படுகாயத்-துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். கண்ணமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.