மேலும் செய்திகள்
பெண்ணை ரயிலில் இருந்து தள்ளிய கொடூரனுக்கு 10 ஆண்டு சிறை
49 minutes ago
சிறுமியிடம் விசாரணை வன அலுவலகம் முற்றுகை
23-Nov-2025
குழந்தை தொழிலாளர் மின்சாரம் பாய்ந்து பலி
23-Nov-2025
வேலுார்: வேலுார், கொசப்பேட்டையில் அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனை உள்ளது. இங்கு, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார் மாவட்டங்களில் இருந்து ஏராளமான கர்ப்பிணியர் பிரசவத்திற்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில், நேற்று காலை பென்ட்லேண்ட் மருத்துவமனைக்கு வெளியே உள்ள சாக்கடையில், பிறந்து சில மணி நேரங்களே ஆன, பெண் சிசுவின் உடல் மிதந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள், வேலுார் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் கூறுகையில், 'பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையில், ஐந்து நாட்களுக்குள் பிறந்த குழந்தைகளின் விபரங்களை சேகரித்து, விசாரிக்கிறோம்' என்றனர். மேலும், அந்த சிசு பிறந்து, சாக்கடையில் வீசப்பட்டதால், இறந்ததா அல்லது இறந்தே பிறந்ததா எனவும் போலீசார் விசாரிக்கின்றனர்.
49 minutes ago
23-Nov-2025
23-Nov-2025