உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இலைகள் வீட்டில் விழுந்ததால் தாக்குதல்: 3 பேர் மீது வழக்கு 

இலைகள் வீட்டில் விழுந்ததால் தாக்குதல்: 3 பேர் மீது வழக்கு 

விழுப்புரம்: விழுப்புரத்தில் பக்கத்து வீட்டு மரத்தின் இலைகள் விழுந்தால், தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.விழுப்புரம் வழுதரெட்டி பகுதியைச் சேர்ந்தவர் கலியபெருமாள், 53; டைலர். கடந்த 9ம் தேதி, இவரது வீட்டில் உள்ள மரத்திலிருந்து, காய்ந்த இலைகள், காற்றில் பறந்து பக்கத்து வீட்டில் விழுந்துள்ளது. அடிக்கடி இலைகள் விழுந்ததால், ஆத்திரமடைந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த அன்பழகன், 50; பிளேமினால், முனியம்மாள் ஆகியோர், கலியபெருமாளை திட்டியதோடு, அவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இதுகுறித்து, கலியபெருமாள் கொடுத்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் அன்பழகன் உள்ளிட்ட 3 பேர் மீதும் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை