| ADDED : மே 01, 2024 01:53 AM
திண்டிவனம் : திண்டிவனத்தில், வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்தியது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.திண்டிவனம் அடுத்த தென்கோடிப்பாக்கம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் ஏழுமலை, 48; அதே பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 60; இருவருக்குமிடையே சொத்து தகராறில் முன் விரோதம் உள்ளது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில் மயிலம் சாலையில் தள்ளுவண்டி டிபன் கடையில் சாப்பிடுவதற்காக ஏழுமலை மற்றும் அவரது உறவினர் பிரவீன்குமார், 24; என்பவரும் நின்று கொண்டிருந்தனர்.அப்போது, அங்கு வந்த ராஜேந்திரனுக்கும், ஏழுமலைக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ராஜேந்திரன் தாக்கப்பட்டார்.இதனைப் பார்த்த கிடங்கல் (2) பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜசேகர், 44; தாக்குதலை தடுக்க முயன்றார். இதில், ராஜசேகரனும் தாக்கப்பட்டார். இந்த தாக்குதலில் காயமடைந்த ராஜேந்திரன், ராஜசேகர் ஆகியோரை திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில், ஏழுமலை, பிரவீன்குமார் ஆகியோர் மீது திண்டிவனம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.