உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பிராந்தி பாட்டில்கள் கடத்தியவர் கைது

பிராந்தி பாட்டில்கள் கடத்தியவர் கைது

கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம் அருகே வெளிமாநில மதுபாட்டில்களை கடத்திச் சென்றவரை போலீசார் கைது செய்தனர்.கண்டாச்சிபுரம் அடுத்த மழவந்தாங்கல் பகுதியில், கண்டாச்சிபுரம் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை 5:00 மணி அளவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், புதுச்சேரியில் இருந்து 213 பிராந்தி பாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில், மலையரசன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சாரதி, 42; என தெரிந்தது.உடன் ஸ்கூட்டர் மற்றும் பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து சாரதியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ