உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஓய்வு பெற்ற கால்நடை ஆய்வாளர் வீட்டில் கொள்ளை

ஓய்வு பெற்ற கால்நடை ஆய்வாளர் வீட்டில் கொள்ளை

விழுப்புரம்: விழுப்புரத்தில் ஓய்வு பெற்ற கால்நடை ஆய்வாளர் வீட்டில் 5 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம், வழுதரெட்டி, சுபஸ்ரீ நகரைச் சேர்ந்தவர் அப்துல் சலாம், 63; ஓய்வு பெற்ற கால்நடை ஆய்வாளர். இவர், கடந்த 3ம் தேதி தனது குடும்பத்துடன், வீட்டை பூட்டிக் கொண்டு கடலுார் மாவட்டம், பரங்கிப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.நேற்று காலை 8:00 மணிக்கு வீட்டிற்கு வந்த பார்த்த போது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 5 சவரன் நகை கொள்ளை போனது தெரியவந்தது.விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். பின், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.புகாரின் பேரில், வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை