உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சொத்து தகராறில் மோதல்; கிராம உதவியாளர் கைது

சொத்து தகராறில் மோதல்; கிராம உதவியாளர் கைது

திண்டிவனம் : திண்டிவனத்தில் சொத்து தகராறில் ஏற்பட்ட மோதலில் கிராம உதவியாளரை போலீசார் கைது செய்தனர். திண்டிவனம் அடுத்த ஈச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ஜானகி,43; கீழ்ஆதனுார் கிராம உதவியாளர். இவருக்கும், ஈச்சேரி கிராமத்திலுள்ள அவரது சகோதரர் ராமசாமிக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு ஈச்சேரி கிராமத்தில் இரு தரப்பிற்கும் மோதல் ஏற்பட்டு, தாக்கி கொண்டனர்.இதில் ராமசாமி, நித்தியாவதி, ஆதர்ஷ்ராஜ்குமார் ஆகியோர் காயமடைந்து, திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மோதல் தொடர்பாக ராமசாமி மகன் நிவாஸ் ஒலக்கூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், முனியன், 45; ராஜவேல், 41; கிராம உதவியார் ஜானகி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.இதேபோல் முனியன் கொடுத்த புகாரின் பேரில் ராமசாமி, நிவாஸ் உள்ளிட்ட 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில், கிராம உதவியாளர் ஜானகி, ராமசாமி ஆகியோரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை