உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு பஸ் கண்டக்டர் நெஞ்சு வலியால் பலி

அரசு பஸ் கண்டக்டர் நெஞ்சு வலியால் பலி

விக்கிரவாண்டி:திருவாரூர் மாவட்டம், நெடும்பாலத்தைச் சேர்ந்தவர் சாமிநாதன், 48, அரசு போக்குவரத்துக்கழக திருவாரூர் டிப்போ பஸ் கண்டக்டர். இவர் காஞ்சிபுரத்தில் இருந்து திருத்துறைப்பூண்டி சென்ற பஸ்சில் பணியில் இருந்தார். உடன், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன், 34, டிரைவராக இருந்தார்.நள்ளிரவு 12:00 மணிக்கு, விக்கிரவாண்டி டோல்பிளாசா அருகே இரவு நேர ஹோட்டலில் டீ சாப்பிட இறங்கினர். அப்போது கண்டக்டர் சாமிநாதனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. உடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.விக்கிரவாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ