உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வானுார் அரசு கல்லுாரியில் உயர் கல்வி விழிப்புணர்வு

வானுார் அரசு கல்லுாரியில் உயர் கல்வி விழிப்புணர்வு

வானுார்: வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, உயர் கல்வி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் வில்லியம் தலைமை தாங்கி பள்ளி படிப்பு மற்றும் கல்லுாரி படிப்புகள் குறித்தும், செயல்பாடுகள் எப்படி அமைய வேண்டும் என்பது குறித்தும் விளக்கினார்.சிறப்பு விருந்தினர்களாக காந்தி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பாலமுரளி சிறப்புரையாற்றினார்.நிகழ்ச்சியில் அனைத்து துறைத்தலைவர்களும், பேராசிரியர்களும் பங்கேற்றனர். ஆங்கில துறைத் தலைவர் ராஜேஸ்வரி ஜெயராணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்