| ADDED : ஜூலை 09, 2024 11:33 PM
விழுப்புரம் : விழுப்புரம் அருகே அரசு பஸ் மோதிய விபத்தில் கணவன், மனைவி காயமடைந்தனர்.விழுப்புரம் அடுத்த நன்னாடு புதுகாலனி பகுதியைச் சேர்ந்தவர் முருகன், 38; இவரது மனைவி மஞ்சுளா, 30; இவர்கள், தங்கள் பைக்கில், கடந்த 7ம் தேதி, செஞ்சியிலிருந்து விழுப்புரம் நோக்கி வந்தனர். அயினம்பாளையம் அருகே வந்தபோது, எதிரே வந்த அரசு பஸ் மோதிய விபத்தில், கணவன், மனைவி இருவரும் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர். இருவரையும் மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.விழுப்புரம் தாலுகா போலீசார், பஸ் டிரைவரான, விழுப்புரம் இந்திரா நகரைச் சேர்ந்த செல்வகுமார், 30; மீது வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.