உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வட்டார போக்குவரத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

வட்டார போக்குவரத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.தமிழ்நாடு வட்டார போக்குவரத்துத்துறை பணியாளர் ஒன்றிப்பு சார்பில், பதவி உயர்வு, காலிபணியிடங்களை நிரப்ப ணேவ்டும். அலகு பணியிட மாறுதல்கள் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடந்தது.விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, போக்குவரத்துத்துறை பணியாளர் ஒன்றிப்பு சரக செயலாளர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் சுவாமிநாதன் முன்னிலை வகித்தார். அரசு பணியாளர் சங்க மாநில இணை பொதுச்செயலாளர் சிவக்குமார் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.இதில், போக்குவரத்துத்துறை பணியாளர் சங்கத்தினர், ஊராட்சி களப்பணியாளர் சங்கத்தினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Balasubramanian
ஆக 10, 2024 06:12

அட ரிப்பன் கட் பண்ணி ஆகிவிட்டது என்றால் செயல் பாட்டிற்கு வந்து விட்டது என்று அர்த்தம்! நூறு மாணவர்களுடன் ஒரு போட்டோ எடுத்து வருகை அறையில் பெரிதாக மாட்டி விட்டு வேறு வேலை இருந்ததால் பாருங்கள்! எப்படியும் அரசு பள்ளிகளில் ஆயுத பூஜை கிடையாது!


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி