கார் மோதி முதியவர் பலி
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே கார் மோதி அடையாளம் தெரியாத முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அரசூர் பாரதி நகர் பகுதியில் 50 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத முதியவர் நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில் தேசிய நெடுஞ்சாலையை கடந்தார். அப்போது திருச்சி - சென்னை நோக்கி சென்ற கார் இவர் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. அதில் அந்த முதியவர் தலையில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த திருவெண்ணெய்நல்லுார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு விழுப்புரம், முண்டிம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.