| ADDED : மே 07, 2024 05:53 AM
விழுப்புரம் : கண்டமானடி ஸ்ரீ கங்கையம்மன் கோவிலில் 9 நாள்கள் சித்திரை திருவிழா நடந்தது.இக்கோவிலில், இந்தாண்டு சித்திரை திருவிழா, கடந்த ஏப்ரல் 26ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை மற்றும் வீதியுலா நடந்தது.நேற்று முன்தினம் நிறைவு நாள் உற்சவம் நடந்தது. அதனையொட்டி, காலை 10:00 மணிக்கு மூலவர் கங்கையம்மனுக்கும், சன்னதியில் உள்ள விநாயகர், முருகர் சுவாமிக்கும் அபிஷேக, ஆராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு உற்சவர் அம்மன், வீரன் சுவாமியுடன் வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.