| ADDED : ஆக 01, 2024 07:16 AM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே சொத்து தகராறில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் சாலாமேடு இ.பி.காலனியைச் சேர்ந்தவர் ராஜசேகர் மனைவி ஆஷா, 42; இவரது உறவி னர்கள் கொளத்துார் பகுதி யைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் செந்தில், 45; அவரது மனைவி மணிமொழி, 40; மகன் கார்த்திக், 23; இவர்களுக்கிடையே குடும்ப சொத்து காரணமாக, முன்விரோதம் இருந்தது.இந்நிலையில், கடந்த 28ம் தேதி, இவர்களது நிலத்தில் உள்ள கருவேல மரங்களை, ஆஷா விற்ற தால், வியாபாரி சதீஷ் மரங்களை வெட்டச் சென்றார். அப்போது, சதீஷை தடுத்து நிறுத்தி, செந்தில் தரப்பினர் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.இது குறித்து ஆஷா கொடுத்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் செந்தில், மணிமொழி, கார்த்திக் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து, அவர்களை கைது செய்தனர்.