உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பாடப் புத்தகம் வழங்கல்

பாடப் புத்தகம் வழங்கல்

மயிலம்: மயிலம் அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவியருக்கு பாடப் புத்தகங்களை ஒன்றிய சேர்மன் வழங்கினார்.மயிலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று காலை நடந்த விழாவில் மயிலம் சேர்மன் யோகேஸ்வரி மணிமாறன் தலைமை தாங்கி பள்ளி மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கினார்.ஒன்றிய செயலாளர் மணிமாறன், ஒன்றிய கவுன்சிலர் செல்வகுமார் முன்னிலை வகித்தனர். வட்டார கல்வி அலுவலர் மதன்குமார் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் பாஸ்கரன் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி தமிழாசிரியர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சந்தோஷ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !