உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இளம் பெண் குறித்து முகநுாலில் அவதுாறு பதிவு: போலீசார் வழக்கு

இளம் பெண் குறித்து முகநுாலில் அவதுாறு பதிவு: போலீசார் வழக்கு

விழுப்புரம், : விழுப்புரம் அடுத்த சிறுவந்தாடு லட்சுமி நகரை சேர்ந்தவர் தங்கராசு மனைவி பார்வதி,45; இவர், கடந்த 10ம் தேதி, அந்த பகுதியை சேர்ந்த இளம் பெண், பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக, தனது முகநூல் பக்கத்தில் அவதுாறு தகவல் பதிவேற்றியுள்ளார். இதனையறிந்த அந்த பெண்ணின் தாயார், இது குறித்து, பார்வதியிடம் வந்து தட்டி கேட்டுள்ளார். அப்போது, அவரை திட்டி, பார்வதி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார், பார்வதி மீது வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ