உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரம் அரசு கல்லுாரியில் இன்று சிறப்பு கலந்தாய்வு

விழுப்புரம் அரசு கல்லுாரியில் இன்று சிறப்பு கலந்தாய்வு

விழுப்புரம்: விழுப்புரம் அரசு கலைக் கல்லுாரியில் இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை சிறப்பு கலந்தாய்வு இன்று நடக்கிறது.கல்லுாரி முதல்வர் சிவக்குமார் செய்திக்குறிப்பு:விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லுாரியில் 2024-25ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இன்று 12ம் தேதி காலை 10:00 மணிக்கு சிறப்பு கலந்தாய்வு நடக்கிறது. எஸ்.சி., எம்.பி.சி., மற்றும் எஸ்.டி., பிரிவின் கீழ் விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கு, அனைத்து துறைகளுக்கான காலியிடங்களுக்கு, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற உள்ளது.கலந்தாய்வுக்கு வருவோர், பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பம், 10, 11, மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் அசல் சான்றிதழ் மற்றும் 2 நகல்கள், பள்ளி மாற்றுச்சான்றிதழ்- அசல் மற்றும் 2 நகல்கள், ஜாதிச்சான்றிதழ்- அசல் மற்றும் 2 நகல்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் 3, வங்கி கணக்கு புத்தகம் முதல் பக்க நகல், ஆதார் அடையாள அட்டை, உரிய சேர்க்கை கட்டணம் கொண்டு வரவேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை