உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கடலில் விழுந்து மூழ்கிய மீனவர் உடல் கரை ஒதுங்கியது

கடலில் விழுந்து மூழ்கிய மீனவர் உடல் கரை ஒதுங்கியது

விழுப்புரம்: மரக்காணம் அருகே மீன் பிடிக்கச் சென்றபோது, படகு கடலில் கவிழ்ந்து நீரில் மூழ்கிய மீனவர் உடல் கரை ஒதுங்கியது.மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பத்தைச் சேர்ந்தவர் குமார், 55; மீனவர். இவரது மகன் சதீஷ்குமார், 28; இருவரும் நேற்று முன்தினம் பைபர் படகில் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். 75 மீட்டர் துாரம் சென்ற போது, அலையில் சிக்கி படகு கவிழ்ந்து. இதில், சதீஷ்குமார் நீந்தி கரையை வந்தடைந்தார். குமார் நீரில் மூழ்கினார்.தகவலறிந்த எக்கியார்குப்பம் மீனவர்கள் மற்றும் கடலோர காவல் படையினர் தேடினர். இந்நிலையில் குமார் உடல் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு எக்கியார்குப்பம் கடற்கரையில் ஒதுங்கியது.மரக்காணம் போலீசார், உடலைக் கைப்பற்றி, பிம்ஸ் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை