உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சூதாடிய வழக்கில்  மூன்று பேர் கைது

சூதாடிய வழக்கில்  மூன்று பேர் கைது

விழுப்புரம், : விழுப்புரத்தில் பணம் வைத்து சூதாடிய வழக்கில் மூவரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் அயினம்பாளையம் கிராமத்தில் ரோந்து சென்றனர். அங்கு, சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த கவிபாலன்,32; செஞ்சி சாலை முன்னா,38; பாப்பான்குளம் அஸ்லாம்,30; ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ