உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

விழுப்புரம்: வளவனுார் அருகே மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி இறந்தார்.வளவனுார்அடுத்த வி.அகரம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் மகன் சாரதி,28; கூலி தொழிலாளி. இவர், கடந்த 23ம் தேதி கெங்கராம்பாளையத்தில் உள்ள ஸ்ரீதர் என்பவரின் நிலத்தில் மோட்டார் கொட்டகை கட்ட சென்ட்ரிங் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது நீளமான இரும்பு கம்பியை சாரதி துாக்கிய போது, மேற்புரத்தில் சென்ற உயரழுத்த மின் கம்பியில் திடீரென பட்டு மின்சாரம் தாக்கியது. காயமடைந்த அவரை, அங்கிருந்த சிலர் மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை