உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கிணறு வெட்டும் பணியின் போது கல் விழுந்து தொழிலாளி பலி

கிணறு வெட்டும் பணியின் போது கல் விழுந்து தொழிலாளி பலி

அவலுார்பேட்டை, : மேல்மலையனுார் அருகே கிணறு வெட்டும் தொழிலாளி மீது கல் விழுந்து இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.மேல்மலையனுார் அடுத்த தாழங்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபாலன். இவரது நிலத்தில் கிணறு வெட்டும் பணி நடக்கிறது. நேற்று முன்தினம் மாலை 4:00, மணிக்கு கிணற்றிலிருந்து கல் எடுத்து கிரேன் மூலம் வெளியேற்றும் பணிகள் நடந்தது.அப்போது மேலே துாக்கிய பெரிய கல் எதிர்பாராத விதமாக கிரேனிலிருந்து நழுவி கிணற்றுக்குள் வேலை செய்து கொண்டிருந்த அதே ஊரைச் சேர்ந்த ராமு, 52; என்பவரின் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த ராமு சம்பவ இடத்திலேயே இறந்தார்.இது குறித்து வி.ஏ.ஓ., ராமமூர்த்தி அளித்த புகாரின் பேரில், அவலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ