உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  2 சவரன் நகை மாயம் போலீஸ் விசாரணை

 2 சவரன் நகை மாயம் போலீஸ் விசாரணை

விழுப்புரம்: பேக்கில் வைத்திருந்த 2 சவரன் நகையை காணவில்லை என இளம்பெண் போலீசில் புகார் கொடுத்துள்ளார். விழுப்புரம் அடுத்த கல்பட்டை சேர்ந்தவர் முரளி மனைவி ஆதிலட்சுமி, 35; இவர், நேற்று முன்தினம் சென்னை ஊரப்பாக்கத்தில் உள்ள உறவினர் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றார். பின், வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அவர் தனது பேக்கில் வைத்திருந்த 2 சவரன் செயின் மாயமாகி இருந்தது. இது குறித்த புகாரின்பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ