உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / முதியவரை தாக்கிய வாலிபர் மீது வழக்கு

முதியவரை தாக்கிய வாலிபர் மீது வழக்கு

விழுப்புரம், : விழுப்புரத்தில் முதியவரைத் தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.விழுப்புரம், ராகவன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல், 50; இவருக்கு சொந்தமான நிலம் பானாம்பட்டு பகுதியில் உள்ளது. இந்த நிலத்திற்கு சக்திவேல் நேற்று முன்தினம் சென்ற போது, வழியருகே அதே பகுதியை சேர்ந்த சஞ்சய், 22; என்பவர் பைக்கில் அமர்ந்தபடி வழியை மறித்துள்ளார்.சக்திவேல், அவரிடம் பைக்கை ஓரமாக நிறுத்தும்படி கூறினார். இதனால் ஆத்திரமடைந்த சஞ்சய், சக்திவேலை திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.விழுப்புரம் தாலுகா போலீசார் சஞ்சய் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை