உழவர்சந்தையில் ஆடிப்பெரு விழா
திண்டிவனம்: திண்டிவனம் உழவர் சந்தையில் வேளாண் வணிகத்துறை சார்பில் ஆடிப்பெருக்கு விழா நடந்தது. சர்வீஸ் லயன்ஸ் சங்கம், லயன்ஸ் சர்வீஸ் டிரஸ்ட், தமிழ்நாடு அரசு வேளாண் வணிகத்துறை சார்பில் நடந்த விழாவிற்கு, வேளாண் உதவி இயக்குநர் சரவணன் தலைமை தாங்கினார். சர்வீஸ் லயன்ஸ் டிரஸ்ட் தலைவர் ஆனந்த், உழவர் சந்தை நிர்வாக அதிகாரி கருப்பையா, மனிஷா, ரவி முன்னிலை வகித்தனர். ஓட்டல் ஆர்யாஸ் உரிமையாளர் முத்துராஜ்குமார் விவசாயிகள், பொது மக்களுக்கு ஆடிப்பெருக்கை முன்னிட்டு விதைகள் வழங்கினார். சர்வீஸ் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் ஆனந்தகுமார், சதீஷ், ரமேஷ், டாக்டர் பார்த்திபன், சின்னராசு, குமார், கமலக்கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.