உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மின்னணு இயந்திர ஓட்டுப்பதிவு குறித்து விழிப்புணர்வு முகாம்

மின்னணு இயந்திர ஓட்டுப்பதிவு குறித்து விழிப்புணர்வு முகாம்

திண்டிவனம்: திண்டிவனம் சப் கலெக்டர் அலுவலகத்தில் மாதிரி ஓட்டுப் பதிவு முகாம் நடந்தது.லோக்சபா தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி பொதுமக்களுக்கு மின்னணு ஒட்டுப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடு குறித்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.திண்டிவனத்தில் தாலுகா அலுவலகம், பஸ் நிலையம் உள்ளிட்ட அதிக அளவில் மக்கள் கூடும் இடங்களில் மாதிரி ஓட்டுப்பதிவு நடைபெற்று வருகிறது.சப்கலெக்டர் அலுவலத்தில் நேற்று காலை நடந்த முகாமில், அலுவலகத்திற்கு வந்திருந்த பொது மக்களிடம் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஓட்டுப்பதிவு முறை குறித்து விளக்கி கூறப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்