உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பஸ் பயண அட்டை புதுப்பிக்கும் முகாம்

பஸ் பயண அட்டை புதுப்பிக்கும் முகாம்

விழுப்புரம்; பார்வையற்றோர் இலவச பஸ் பயண அட்டை புதுப்பித்தல் முகாம் நடக்கிறது.கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு:விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில், வரும் 23, 24 தேதிகளில், சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இரு தினங்களும், காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று பயனடையலாம்.மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, மருத்துவ சான்று மற்றும் பாஸ்போர்ட் புகைப்படத்தை கொண்டு வந்து, இலவச பஸ் பயண சலுகை அட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ