உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கார் திருட்டு : போலீஸ் விசாரணை 

கார் திருட்டு : போலீஸ் விசாரணை 

வானுார்: வானுார் அருகே வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வானுார் அடுத்த நாராயணபுரம் சர்க்கரை ஆலை ரோட்டைச் சேர்ந்தவர் செல்வம் (எ) அய்யனார், 47; விவசாயி. இவர் தனது டவேரா காரை கடந்த 8ம் தேதி இரவு வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருந்தார். 9ம் தேதி காலை பார்த்தபோது காரை காணவில்லை. இதுகுறித்து அவர் 10ம் தேதி அளித்த புகாரின் பேரில், வானுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ