உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மதுபாட்டில் கடத்தல் 2 பேர் மீது வழக்கு

மதுபாட்டில் கடத்தல் 2 பேர் மீது வழக்கு

வானுார்- மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.ஆரோவில் போலீசார் நேற்று முன்தினம் இரவு திருச்சிற்றம்பலம் கூட்ரோடு - இரும்பை ரோடு சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக பையுடன் நடந்து வந்த 2 பேரிடம் சோதனை செய்தனர். அதில் அவர்கள் 46 பீர் மற்றும் குவாட்டர் மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. விசாரணையில், காரைக்கால் கோவில் தெருவைச் சேர்ந்த ஆல்பர்ட் மகன் பிவிரில் ஜோ, 26; கேரளா மாநிலம் பாலக்காடு அஜய், 30; என்பது தெரிய வந்தது. உடன் இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை