உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

விழுப்புரம்: விழுப்புரத்தில் மனைவியை சந்தேகப்பட்டு தாக்கிய கணவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.விழுப்புரம் வண்டிமேடைச் சேர்ந்தவர் செந்தில்குமார்,45; இவரது மனைவி சிவரஞ்சினி,31; இவர்களுக்கு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து, 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். செந்தில்குமார் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து, மனைவி மீது சந்தேகப்பட்டு, திட்டி தகராறு செய்து வந்துள்ளார். இதனால், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு, சிவரஞ்சினி தனது தாய்வீட்டிற்கு சென்று வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது வீட்டிற்கு சென்ற செந்தில்குமார், சிவரஞ்சினியை திட்டி தாக்கியுள்ளார். புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார், செந்தில்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை