உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  கார் நிறுத்துவதில் தகராறு 5 பேர் மீது வழக்குப் பதிவு

 கார் நிறுத்துவதில் தகராறு 5 பேர் மீது வழக்குப் பதிவு

விழுப்புரம்: விழுப்புரத்தில் கார் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். விழுப்புரம் தனலட்சுமி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா, 51; இவரது வீட்டின் முன் தனியார் பல் மருந்தகம் உள்ளது. கடந்த 23ம் தேதி, ராஜா தனது வீட்டின் முன்பு காரை நிறுத்தியிருந்தார். அப்போது, காரை தள்ளி நிறுத்தும்படி, பல் மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால், ஏற்பட்ட தகராறில் ராஜாவை மருந்தக ஊழியர்கள் தாக்கினர். இதுகுறித்து இரு தரப்பு புகாரின் பேரில், மகேஸ்வரி, 48; ராஜா, 51; தேவநாதன், 45; ராஜா, அவரது மனைவி மகாலட்சுமி, 46; ஆகிய 5 பேர் மீது விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி