மேலும் செய்திகள்
பஸ்சில் தம்பதியிடம் நகை திருட்டு
11-Sep-2025
செஞ்சி: அரசு பஸ்ஸில் பயணம் செய்த பெண்ணிடம் மூன்று சவரன் செயினை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். செஞ்சி அடுத்த அம்மன் குளத்து மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் மனைவி கவுசிகா, 27; இவர், கடந்த, 8ம் தேதி பொருட்கள் வாங்க செஞ்சிக்கு வந்தார். மீண்டும் மதியம் 1:10 மணியளவில், செஞ்சியில் இருந்து ரெட்டனை செல்லும் அரசு டவுன் பஸ்சில் ஊருக்கு சென்றார். ஈச்சூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது அவர் கழுத்தில் இருந்த மூன்று சவரன் செயின் திருடு போனது தெரிந்தது. செஞ்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
11-Sep-2025